பூக்கள் இன்று
அதிகமாகவே
அழகாயிருந்தன..
ஒரு வேளை
என் வருகையை
முன்பே அறிந்து
மனமடல் திறந்து
சிரித்தனவோ?
காற்றில் என்ன
சுகந்தம்..??
ஓ...!!
நான் தடவ மறக்கும்
வாசனையை பரவ
விட பார்த்திருக்கும்
மகரந்த குழல்களின்
மாட்சிமையா??
வானத்தில் மேகம்..
புத்தோவியம் வரைந்து
ஏதோ ரகசியம் என்னோடு
மட்டும் பேசும் சங்கேத
மொழி எதற்கு...??
ஓ....!!
என் ராஜகுமாரரை
வரைந்து எனை
வெட்கப் பட வைத்து
கீழ் வானத்தை இன்னும்
சிவப்பாக்க திட்டமோ??
சாலைகள் என்ன..
முன்னை விட
பளபளப்பாய்...??
என்னை
அதனில் பதிக்க
(பாத)ரசமேதும்
பூசிக் கொண்டதோ??
இன்று மட்டுமென்ன..
எல்லாமே புதுமையாய்..!!!
ஓ....!!
நான் எழுதிக் கசக்கிய
காகித கிறுக்கல்களை
காற்று காட்டிக்
கொடுத்து
விட்டனவோ..?
இல்லையில்லை..
இருக்காது..
இது...
வசந்தம் நோக்கி
காத்திருக்கும்..
இயற்கையின்
வரவேற்புக் கம்பளம்..
நானும் காத்திருக்கிறேன்..
குயில்களின் கூவலோடே..
வசந்தம் வரும் வழியில்...!!
-பூமகள்.
1 comments:
வசந்தம் வரும்! பூவும் பூத்து குலுங்கட்டும்!
Post a Comment