RSS

Saturday, August 23, 2008

ந(ம்)ல் நட்பு..




ந(ம்)ல் நட்பூ...

பூவாகி மலர்ந்து மணம் வீசும் காலம்....
வாழ்வின் எல்லைக் கோடு வரை நீளும்..!!

அவற்றின் சுவாசப் பைகளில்..

சில்லரைச் சிதறல்களாக..
நம் சிரிப்பொலிகளைப் பதிவாக்கி
அவ்வப்போது குலுக்கிப் பார்க்கிறேன்..

சத்தமற்ற தனித்த பொழுதெல்லாம்..
நம் நட்பெனக்கு..
சத்தமெழுப்பி
இசைபாடி மகிழ்விக்கிறது..


பல மைல்கள் தொலைவிருந்தாலும்..
பேசி மாதங்கள் பல கடந்திருந்தாலும்..

சில காலம் நிரம்பிய உன்னை
பல நேரம் தினமும் நினைத்திருப்பேன்..

மனதினுள் வேண்டிக் கொண்டே
இருக்கிறேன்..
எனக்காக அல்ல
உனக்காக..


நம் உரையாடல்கள்..
நான் பேச...
நீ பதிலுரைப்பது..
மௌன மன படங்களாகவே
என் கண் முன் விரிகிறது..

உன் பதிலை
நானே யூகிக்கிறேன்..

என் பதிலை
நீயும் யூகித்திருப்பாய் என்ற
நம்பிக்கையில்..

புரிதலின் எல்லை
நாம் வரைந்த
கோடுகளையும் கடந்து நிற்கிறது..


உலகின் எங்கிருந்தாலும்
எனக்கான நட்பு..

மகிழ்வில் உன்னோடு
ஆரவரிக்கும்..
துயரில் உன்னோடு
தோள் கொடுக்கும்..

கலங்காதே என் நட்பே...!!

(என் தோழிக்கு சமர்ப்பணம்...!!)