RSS

Thursday, August 12, 2010

இடுக்கண் வருங்கால்..!


இடுக்கன் வருங்கால்..!!

வெட்ட வெட்ட
வளரும் நகமாக
வளர்ந்து கீறும் நினைவுகள்..

அதிகம் வலித்த
தருணம் அனைத்தும்
ஒருங்கே கூறும் அவை..

உறவு தரும் வார்த்தை
உளியடியாய் இறங்கி
ஆறுதலுக்கு பதில்..
ஆறா வடுவாக்கும் நெஞ்சில்..

கதறி அழ நினைத்தும்
காய்ச்சல் குழந்தை முகம்
கலக்கமாய் நினைவூட்டும்
கசந்து வற்றும்
அம்மா பால்..!

மருத்துவர் சொல்படி
மென்று முழுங்கி
ஜீரணிக்க முயலும்
ஜீரணமாகாத நினைவுகளோடு
புதியதாய்
புதிய தாய்..!


1 comments:

யாரோ said...

கவிதையின் வலி புரிகிறது ....கருத்தாக்கம் என்னவோ?