Saturday, August 3, 2013

விடைகளின் விடை




நகல் கலக்காத நிசமென்ற ஐயமுடன்,
விடை பகிராத வினாக்களோடு
நிதம் தொடர்கிறேன்..

நத்தையின் வேகமாய்
நகரும் நிகழ் காலத்தில்..
பருந்தின் வேகத்தில் -என்னுள்
பின்னோக்கி பயணிக்கிறாய்..

கசப்பான விடைகளையே
ருசியறிந்த செவிகள்..
இனிப்புண்ண காத்திருக்கும்
வீசப்படும் விடைகளுக்காய்..

வருங்கால நித்திரையில்
உனக்கும் வரக்கூடும்
இது போன்ற நெருக்கும் 
சொப்பனங்கள்..

விடைகள் மட்டும் அப்போது
விடையறிந்திருக்கும் 
கட்டாயம்..!


--பூ.

4 comments:

  1. ஆனால் நமக்குத் தெரியாமல் இருதிருப்போம்....

    ReplyDelete
  2. ஆழமாக சிந்தனையில் விளைந்த
    அற்புதமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. // நத்தையின் வேகமாய்
    நகரும் நிகழ் காலத்தில்..
    பருந்தின் வேகத்தில் -என்னுள்
    பின்னோக்கி பயணிக்கிறாய் //

    எனைக் கவர்ந்த வரிகள்...

    அழகிய மிக ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கவிதை! அருமை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அழகிய கவிதை.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.