Saturday, June 11, 2011

நட்பு..!!



தீராது பேசி
தீண்டிய நட்பொன்று..
தீயாய் பறக்கிறாள்..
காகிதத்தை இரையாக்க....

பொழுதெல்லாம் பிரியாமல்..
விழுதாகத் தொடர்ந்தவள்..
தன் வீழ்ச்சிதனை சுமந்து
தலைகாட்ட மறுக்கின்றாள்..

நகை கொடுக்கும் அமுதவாய்க்காரி..
நெஞ்செங்கும் நெருங்கியவள்..
கல்யாணம் கண்டதும்
கல்மனம் காட்டுகிறாள்..

இருந்தாலும் நீயின்றி
ஓர் நினைவும் இல்லையடி..
வாழ்க்கைச் சுழற்சியிலே
சந்திப்போமா சொல்லடி...!!

--பூமகள்.


1 comment:

  1. நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.