எரிகின்ற நதி நான்..
நீரூற்றாய் வந்திட்டாய்...
காட்டுப் பூவைப் போல்
கலையாய் நீ வந்தாய்..
கலங்கிய மனதை
கை பிடித்து ஏற்றுவித்தாய்..
என் பசிதனை உணர்ந்து
உணவிட்டு மகிழ்வித்தாய்..
மெய்சிலிர்க்கும் நொடியனைத்தும்
மெய்யாக தந்திட்டாய்..
உன் அன்பாலே குளிர்வித்தாய்..
ஏழையென் ஏக்கம் மாய்ப்பித்தாய்…
என் வலிதனை மறந்து
உன் வலிக்காய் அழவைத்தாய்..
உன் வலி தர மறுக்க..
ஏனோ மௌனப் பூட்டிட்டாய்..
எரிகின்ற நதியென்றே
எனை மீண்டும் ஆக்கிட்டாய்…!!
-பூமகள்.
No comments:
Post a Comment
கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..
வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..
அன்புடன் உங்கள்,
பூமகள்.