Thursday, October 17, 2013

துளித்துளியாய்..!!


தூரத்து பனிச்சிகரத்திலிருந்து
உருளும் ஒற்றைப் பனித்துளியாய்
கடந்து கொண்டிருக்கும்
காலமும் காற்றும்
உன் கவிதைகளை
நினைவுச்சிகரத்திலிருந்து
கடத்திக் கொண்டேயிருக்கின்றன
சுவடுகள் விட்டதை அறியாமல்..!!

--பூ.

&&&&&&

மழை தனித்து வருவதேயில்லை..
கொஞ்சும் மேகத்தோடு
இடி இசையில்
உன் நினைவுகளையும்
பொழிந்துவிடுகிறது என்னில்..!!

--பூ.

&&&&&

3 comments:

  1. துளித்துளியாய் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகிய கவிதை வரிகள்! அருமை!

    ReplyDelete
  3. ரசிக்கக் கொடுத்த இரு துளிகளும் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.