Tuesday, April 19, 2011

சித்திரையின் சித்திரங்கள்..!!



*
அன்று..

வெயில்
அவர்களுக்காகக்
காத்திருந்தது..

அம்மா முந்தானையின்
காற்றாய் வீசும் மரத்தினடி
அவர்கள்..!!

இன்று..

வெயில்
அவர்களுக்காக
காத்திருந்தது..

தார்ச் சூடு தாங்காமல்
ப்ளாஸ்டிக் கூரையடி
அவர்கள்..!!

################

*

மழை
பிரசவிக்கும்
மேகம்..
மலடானது..

மரப் பஞ்சம்..!!

*

கழுத்தறுந்த மரக் கொம்பு
தவித்து நிற்கும்
கூடிழந்த பறவைகள்..

எங்கும் கூடாரங்கள்..
குருவிகளுக்கெங்கே
வாழ்வாதாரங்கள்??!!

*
__________________
-- பூமகள்.




No comments:

Post a Comment

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.