Tuesday, April 19, 2011

நிறப் பிரிகை..!!




வானவில்லின் நிறம்
பற்றி ஆயிரமாயிரம்
கேள்விகள்..

ஊதா துவங்கி
சிவப்பு வரை விடைகள்
முற்று பெற்றாலும்
முற்று பெறாத
கேள்வியின் நிறங்கள்..

வானவில்லில்
ஊஞ்சல் ஆடி,
ஒரு முனையேறி
மறுமுனை விழுந்து
கதை பல புனைந்தும்
விடுவதாய் இல்லை
கேள்விகள்..

வண்ணங்கள் குழைத்து
அறிவியல் தெளித்து
புதிர் உடைக்கையில்
உதிர்ந்து போனது
சின்ன இதயத்தில்
வளர்ந்த வானவில்…!!
__________________
-- பூமகள்.

No comments:

Post a Comment

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.