Thursday, October 17, 2013

துளித்துளியாய்..! - 2

மழையின் வெள்ளத்தில்
அடித்துச் செல்கிறது
மனத்தின் வெப்பம்..!!

&&&&@@@@&&&&&

இடியின் இடிபாடுகளின் வழி
மேக முறைப்புகளுக்கு பயந்து
தம் துயரெல்லாம் கவிழ்ந்து வடிக்கும்
ஓர் செம்பருத்திப் பூவின்
மகரந்தத்தில் ஒடிங்கியிருக்கும்
ஓர் மழைத் துளி..!

&&&&

இருளெல்லாம் நனைக்கிறது
இரவுப் பணி முடித்து
எழுப்புகிறது விடியலை - மழை..!!

--பூ.

3 comments:

  1. வரிகளில் நனைந்தேன்...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நனைய வைத்து ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  3. நனைய வைத்து ரசிக்க வைத்தன.

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.