Monday, September 7, 2015

இல் இல்லாதவர்..!!

இல் இல்லாதவர்..!!

மௌனச் சாரலின்
சில்லிட்ட உணர்வுகளால்
நிரம்பி வழியும் அந்தி!!

பொழுதெல்லாம் 
வெம்மையில் வெக்கி
நாணிச் சிவந்த முகில்!!

ஊடலும் கூடலுமாய்
மோனத்தில் கரைந்து
கானல் காட்டும் நிலா!!

அடுப்படி அழுத்தலில் 
அம்மாக்கள் பணித்திருக்க.. 
வழி தீரா பயணத்தில்
அப்பாக்கள் அரண்டிருக்க..
கூடு தேடும் குருவிகளாய்
சன்னல் சிறை சாய்ந்துறங்கும்
மின்மினிகள்..!!

அழுக்கேறிய உடையின்
சல்லடை நுழைக்காற்றின்
கூதலோடு போராடும்
சாலையோரத் துயிலோரை
அடித்தெழுப்பி கறக்கும்
விதிமுறை பாதுகாவலர்களை
அனைவரும் கடந்திருப்போம்..
இல் இல்லாதோரின் 
வலி உணராமலேயே!!

--பூமகள்.




No comments:

Post a Comment

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.