RSS

Wednesday, December 26, 2007

நாம் யார்??







ரோஜாவின் செவ்விதழ்
தடவிய பனித்துளி
மிளிரும் புன்னகையோடு
பகலவன் முன்..!!


மகரந்த சூல்பையில்
மயங்கிய வண்டொன்று
பனித்துளி நோக்கி
படையெடுக்கும்
வைரம் திருட...!!

நொடிப்பொழுதில்
கரையும் பனித்துளி
வைரமென்றால்
காலத்தின் கையில்
நாம் யார்??


விடை தெரியா
வாழ்க்கை
விடைதேடும்
பூச்செடிகள் - நாம்!


__________________
~பூள்.

0 comments: