![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1OlBFDrYP5PVYHTZI-SeXmiUq_8q1fZhMDons2WyyYzralLUTkyMjs5TnSLG2whPxe4CB2lQf_vRUW2uCqjtmTbwMlQRbhH8CVgUN4YB0DjyIG47NY6LV0Zz9aLL71OJhUAdFXaw4JA/s400/r20104704.jpg)
வாஞ்சை பேச்சு
வஞ்சனை உள்ளம்
வசிய மனிதர்..!
நிஜ முகம் களைந்து
பொய் முகங்களின்
பேரூர்வலம்
தெருவெங்கும்.....
நிஜ முகங்கள் தேடி
நிதம் வாடும்
என் மனம்....!!
முகத்தில் சிரிப்பு
மொத்தத்தில் வெறுப்பு
முகம் காட்டா
அகம் ஏராளம்.....!!
யாரிடமும்
மெய்முகம் காட்ட
மறுப்பதென்ன
மானிடா???
உண்மையாய்
உறைவது
உறுத்துதோ
உனக்கு....??????????
உள்மன
அழுக்கை அகற்றி
ஆழ்மன அழகில்
லயித்துப்பார்
கொஞ்சம்........
ஆன்மா பேசும்
அமைதி மொழி...!
அறிந்து கொள்
அது நல் வழி...!
-பூமகள்.