RSS
Showing posts with label செய்திகள்/தகவல்கள். Show all posts
Showing posts with label செய்திகள்/தகவல்கள். Show all posts

Friday, March 27, 2009

பூமி மணித்துளி(Earth Hour)

பூமி மணித்துளி(Earth Hour)


மனித இனத்தின் மகத்தான விஞ்ஞான வளர்ச்சியினால் பூமிக்கு உண்டாகும் கலக்கம் கொஞ்ச நஞ்சமல்ல...


அண்டார்ட்டிக் பனி உருகுதல் முதல்... ஓசோன் ஓட்டை வரை நம் எல்லைகளை நாம் விரிவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறோம்...


அத்தகைய பாதகத்தை ஒரு மணி நேரமாவது நிறுத்தி கொஞ்சம் பூமியை ஆசுவாசமாக மூச்சுவிட வைத்து அதன் இயல்பில் இருக்க வைக்கும் நோக்கத்தோடும் பூமியின் மேல் மனித இனத்தின் மாசுக்கேட்டை உணர்த்தும் வகையிலும் இந்த பூமி மணித்துளி அனுசரிக்கப்படுகிறது.


இதனை "World WildLife Fund" என்ற அமைப்பு உலகெங்கும் உள்ள ஒவ்வொரு தனி நபரையும், வியாபாரிகளையும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களையும் பூமி மணித்துளியை அனுசரிக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.


பூமி மணித்துளியின் நோக்கம் - பூமியின் மீது உண்டாகிவரும் தட்ப வெப்ப நிலை மாற்றத்தையும் அதற்கான தீர்வு காணும் உத்வேகத்தையும் உலகளவில் உருவாக்க வேண்டுமென்பதே.


இவ்வருடம், மார்ச் 28 ஆம் தேதி, இரவு 8.30 மணி அமெரிக்க நேரப்படி இந்த பூமி மணித்துளி நேரமாக அனுசரிக்க இருக்கிறார்கள்.



அப்போது ஒரு மணி நேரம் பூமியில் உள்ள அனைவரும் மின்சாரத்தை நிறுத்தி எர்த் ஹவரை அனுசரிக்க வேண்டுமென சொல்கிறார்கள்.


ஆனா இது இந்தியாவுக்கு பொருந்தாது.. நாம தான் தினம் தினம் ஒரு நாலு மணி நேரமாவது இந்த எர்த் ஹவரை அனுசரிச்சிட்டு இருக்கோமே...!!


இன்னும் மின்சார வெளிச்சத்தையே காணாத ஏழை நாடுகளுக்கும் இவை பொருந்தாது.. பொருந்தும் நாள் விரைவில் வர வேண்டுமென்பதே என் பிராத்தனைகள்.


நல்ல விசயமாகபடவே.... நான் தயாராகிவிட்டேன்... அப்போ நீங்க??!!

Tuesday, April 15, 2008

மக்கள் தொலைக்காட்சியின் சித்திரை உலா விமர்சனம்

சித்திரை உலா நிகழ்ச்சி விமர்சனம்

நான் நேற்று சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, ஒவ்வொரு அலைவரிசையும் புதிய படங்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்க.. எதேட்சையாக மக்கள் தொலைக்காட்சிக்குத் தாவ, அங்கே நான் கண்ட நிகழ்ச்சி என்னை மகிழ்ச்சிப் பெருங்கடலில் ஆழ்த்தியது.

ஆமாம்.. "சித்திரை உலா" என்ற நிகழ்ச்சி தான் அது.


அதில் சென்னை அம்பத்தூரில் இருக்கும் “தாய்த் தமிழ் பள்ளி”யைச் சேர்ந்த 21 குழந்தைகளை வெளியில் சுற்றுலாவாக அழைத்துச் சென்று.. அவர்களோடு சந்தோசமாக விளையாடி அவர்களுக்கு புதியவற்றைக் கற்றுத் தரும் நிகழ்ச்சி.

இதில் வரும் தொகுப்பாளினி ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சியில், ஏழைக் குழந்தைகள் இருவரை அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்தமான உடையோ, விளையாட்டுப் பொருளோ எதுவாகினும் வாங்கித் தந்து திரும்ப கொண்டு வந்து விடுவார். அந்த நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி எங்கள் வீட்டில் பிரபலம். அதே தொகுப்பாளினி தான் இந்த நிகழ்ச்சியையும் வழங்கினார்.

நான் நிகழ்ச்சியின் பாதியிலிருந்து கவனித்ததால் ஆரம்பம் முதல் என்னென்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நான் பார்க்கையில் இரு வேன்களில் குழந்தைகள் மாமல்லபுரம் நோக்கிப் பயணப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளினி, அன்புடன் எல்லா குழந்தைகளிடம் உரையாடி, எழுதுகோலையும் கையேட்டையும் கொடுத்து, இது வரை பார்த்து வரும் அனைத்தையும் அழகிய தமிழில் எழுதும் படி சொன்னார். அதிகம் யார் எழுதுகிறார்கள் என்று இறுதியில் பார்ப்போம் என்று சொல்லி குழந்தைகளின் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கினார்.

அந்த குழந்தைகளிடம் எந்த பாரபட்சமும் இன்றி அன்புடன் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டி, தனி ஒரு பெண்ணாக அழகான வழி நடத்திச் சென்றார். ஒரு உணவகத்தில் உணவு உண்ணச் செய்து, இறுதியில் பரிமாறிய ஐஸ்கிரீமுக்கு தூய தமிழ் சொல் என்ன என்று வினவி, குழந்தைகளை உண்ணும் போதும் ஆழ்ந்து சிந்திக்க வைத்தார். கூடவே நம்மையும் சிந்திக்க வைத்தார்.. இறுதியில் அவரே சொன்னார்… ஐஸ்கிரீமுக்கு தூய தமிழ் சொல் “பனிக்கூழ் என்பது தான்.

ஒவ்வொரு முறை மக்கள் தொலைக்காட்சி பார்க்கையிலும் ஒரு புதிய சொல்லையோ அல்லது நிகழ்ச்சியின் தரமோ மனதில் பதிந்து நெகிழச் செய்துவிடுகிறது..!!

அத்தகைய வகையில் அமைந்த இந்நிகழ்ச்சி என் மனத்தில் பெரும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தத் தவறவில்லை..!!

ஒரு பெண் தொகுப்பாளினி இத்தனை அழகாக 21 குழந்தைகளை வழி நடத்தி, ஆசிரியைகளையும் விட அன்புடனும் பொறுப்புடனும் அமுதத் தமிழில் அழகாக கற்றுத் தந்த செயல் என்னை பெருமிதம் கொள்ளச் செய்துவிட்டது. ஆகவே, இந்த விமர்சனம் எழுதி, எனது மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

நிழல் உருவங்களையே எல்லா தொலைக்காட்சிகளும் முதன்மையாக போற்ற.. நிஜத்தை அதுவும் அடுத்த தலைமுறையினரின் சிறப்பான முன்னேற்றத்தையே முதன்மையாக கொண்டு செயல்படும் மக்கள் தொலைக்காட்சி தன்னிகரற்ற தொலைக்காட்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை…!!
__________________
~பூள்.

Friday, February 22, 2008

நானோவுக்கு அடுத்து மடிக்கணினி புரட்சி..!

மடிக்கணினியின் இமாலய வளர்ச்சியைத் தொடர்ந்து, இப்போது ஹெச்.சி.எல் நிறுவனம் 13,990/-இந்திய ரூபாயில் மடிக்கணினி ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது.

இனி வீட்டுக்கு ஒரு நானோ போல வீட்டுக்கு நாலு மடிக்கணினி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இது பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

-பூமகள்.