கடந்த சில நாட்களாக ஒரு விளம்பரத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது...
கொஞ்சம் அதிர்ந்து போன நான் இது பற்றி எழுதியே ஆக வேண்டுமென்று தோன்றவே என் இப்பதிவு...
ஒரு ஐந்து வயது குழந்தை தன் தந்தையிடம் வந்து "அப்பா... நான் அழகா இருக்கனா?"
அப்பா, "நீ ரொம்ப அழகா இருக்கம்மா... "
குழந்தை உடனே, "பின்னே ஏன் ஸ்கூல்ல யாருமே என் கிட்ட பேச மாட்டீராங்க..."
உடனே தந்தை ஒரு புது காரில் தன் மகளை ஏற்றி பள்ளிக்கு வருகிறார்.. வழியில் போகும் சிறார் எல்லாம் அக்குழந்தையைப் பார்க்க...
பள்ளியில் இறங்கும் குழந்தை பெருமிதத்துடன் இறங்குகிறது... அருகில் வர பல சிறுவர், சிறுமியர் வட்டமிடத் துவங்குவர்...
ஒரு பெரிய கார் நிறுவனத்தின் இம்மாதிரியான விளம்பரம் கண்டு கொஞ்சம் அதிர்ந்து போனேன்..
எல்.கே.ஜிக்கு செல்லும் குழந்தைகளிடமே இவ்வகை பணக்கார மோகத்தை உருவாக்கி அவர்களின் சமத்துவத்தை பறிக்கும் நிலையாக இதைக் கருதுகிறேன்...
கார் இருந்தால் தான் மதிப்பார்கள்... என்ற பெருமிதம் கலந்த கர்வத்தை தவறாக சிறு வயதிலேயே வளர்க்க அனுமதிக்கும் செயலாகவே இதனை நான் கருதுகிறேன்..
அப்படியெனில் பள்ளிக்கு வரும் மற்ற கார் இல்லாத குழந்தைகளின் மன நிலை???
எங்கே சென்று கொண்டிருக்கிறோம்...
விதைகள் வெம்பும் முன் காத்தல் நம் கடமையல்லவா??
சிந்திப்போமா இனியேனும்...????!!

