RSS

Sunday, December 16, 2007

கிளை தேடி...!





கிளை தேடி..!

கிளைகள் தேடும்
காற்றுப் பாதையில்
ஓர் விடுபட்ட இலை..!

தொலைத்த கிளையை
தேடும் விழியுடன்
தொலையா நினைவு..!

தெரிந்தே தேடும்
துன்பத்தின் வழியாக
தவிக்கும் பச்சிலை..!

துவண்டு விழுந்ததும்
தட்டி எழுப்பின
அன்புக் கரங்கள்..!

குற்றுயிராய் இருக்கும்
சருகுக்கு புரிந்தது
விடுபட்ட கிளையோடு
சிநேகம் இனி
செயற்கை என்று..!

உரமாகும் முயற்சியில்
இப்போது சருகு..!!
__________________
~பூமகள்.

0 comments: