RSS

Monday, June 30, 2008

உலக அன்னையருக்காக பூவின் சின்ன சந்தப் பூச்செண்டு..!

தாரே சமீன் பர் - நிலத்தில் (பூக்கும்) நட்சத்திரங்கள்

இந்த படத்தின் மிக முக்கிய பாடல்களில் மகத்தான பாடலாக நான் கருதும் பாடலான "மேரே மா....!!" - பாடலை சந்தங்களுக்குத் தக்க படி அப்படியே அர்த்தம் மாறாமல் மொழியாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறேன்..

ஒரு சில வார்த்தைகள் சரியாக அர்த்தமறியாவிடினும்.. (மன்னியுங்கள் ஹிந்தி ஆர்வலர்களே..)

உலகத்தின் அனைத்து அம்மாவும் இந்த மழலையின் சின்ன அன்பு காணிக்கை..!







பாடல் வரிகள்:

(பல்லவி)

நான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும்
இருளைக் கண்டு பயந்துடுவேனம்மா..

நான் எதையுமே காட்டுவதில்லையே..
உன் அருகாமை விரும்புவேனம்மா...


உனக்கு எல்லாம் தெரியும்
தானேம்மா..??

உனக்கு எல்லாம்............
தெரியுமே என் அம்மா...!!

(சரணம் - 1)


கூட்டத்தில் என்னைத் தனியே விட்டாலுமே
வீட்டை தேடி வரவே முடியாதேயம்மா..

எத்தனை தூரமென்னை விட்டாலுமே.
நீ என்னை மறக்க மாட்டாய் இல்லம்மா..??!!

நான் இத்தனை மோசமா சொல்லம்மா...
நான் இத்தனை மோசமா சொல் என் அம்மா...!!


(சரணம் - 2)

எப்போதெல்லாம் அப்பா என்னை
மேல்தூக்கியே விளையாடும் போதெல்லாம்மா...

என்னருகிலே நீயிருப்பாயே.. நான்
வந்து உனை அணைச்சி கொள்வேனேம்மா..

அப்பாக்கிட்ட சொல்லியதில்லையே... - ஆனா
நான் உடைஞ்சு போயிடுவேனேயம்மா..

முகத்தில் நான் காட்டியதில்லையே...
மனசில் பயந்து நடுங்கிடுவேனே அம்மா...


உனக்கு எல்லாம் தெரியும்
தானேம்மா..??

உனக்கு எல்லாம்............
தெரியுமே என் அம்மா...!!

நான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும்
இருளைக் கண்டு பயந்துடுவேனம்மா..

நான் எதையுமே காட்டுவதில்லையே..
உன் அருகாமை விரும்புவேனம்மா...


உனக்கு எல்லாம் தெரியும்
தானேம்மா..??

உனக்கு எல்லாம்............
தெரியுமே என் அம்மா...!!

எழுத்தாக்கம்: பூமகள்

Thursday, June 5, 2008

இன்று மட்டும் என்ன??




பூக்கள் இன்று
அதிகமாகவே
அழகாயிருந்தன..

ஒரு வேளை
என் வருகையை
முன்பே அறிந்து
மனமடல் திறந்து
சிரித்தனவோ?

காற்றில் என்ன
சுகந்தம்..??

ஓ...!!
நான் தடவ மறக்கும்
வாசனையை பரவ
விட பார்த்திருக்கும்
மகரந்த குழல்களின்
மாட்சிமையா??

வானத்தில் மேகம்..
புத்தோவியம் வரைந்து
ஏதோ ரகசியம் என்னோடு
மட்டும் பேசும் சங்கேத
மொழி எதற்கு...??

ஓ....!!
என் ராஜகுமாரரை
வரைந்து எனை
வெட்கப் பட வைத்து
கீழ் வானத்தை இன்னும்
சிவப்பாக்க திட்டமோ??

சாலைகள் என்ன..
முன்னை விட
பளபளப்பாய்...??

என்னை
அதனில் பதிக்க
(
பாத)ரசமேதும்
பூசிக் கொண்டதோ??

இன்று மட்டுமென்ன..
எல்லாமே புதுமையாய்..!!!

ஓ....!!
நான் எழுதிக் கசக்கிய
காகித கிறுக்கல்களை
காற்று காட்டிக்
கொடுத்து
விட்டனவோ..?

இல்லையில்லை..
இருக்காது..
இது...
வசந்தம் நோக்கி
காத்திருக்கும்..
இயற்கையின்
வரவேற்புக் கம்பளம்..

நானும் காத்திருக்கிறேன்..
குயில்களின் கூவலோடே..
வசந்தம் வரும் வழியில்...!!


-பூமகள்.

Monday, June 2, 2008

வளைவுக் கோலம்..!!

வளைவுகள் தரும்
நெளிவு சுழிவில்..
நெளிந்த படி இருந்தது..
என் வீட்டுக் கோலம்...

புரியாமல் போகும்
என்னை புன்சிரிப்போடு
வழி அனுப்பியது...

நெளிந்து கொடுத்தால்
நிமிரலாமென பக்கவாதங்கள்
வேதம் ஓத...

சத்தியத்தின்
சோதனைக் கூடத்தில்
நெளியாததால்..
வெளியிலிட்ட கரித்துண்டாய்
நான் மட்டும்..

Sunday, June 1, 2008

துவக்க முடிவு..!





தூரத் தெரியும்
ஒற்றை மரம் நோக்கி
வடக்கிருக்கிறது..
உடைந்த திசையிலி
கைகாட்டி..!

__________________
--- பூமகள்.