RSS

Monday, June 2, 2008

வளைவுக் கோலம்..!!

வளைவுகள் தரும்
நெளிவு சுழிவில்..
நெளிந்த படி இருந்தது..
என் வீட்டுக் கோலம்...

புரியாமல் போகும்
என்னை புன்சிரிப்போடு
வழி அனுப்பியது...

நெளிந்து கொடுத்தால்
நிமிரலாமென பக்கவாதங்கள்
வேதம் ஓத...

சத்தியத்தின்
சோதனைக் கூடத்தில்
நெளியாததால்..
வெளியிலிட்ட கரித்துண்டாய்
நான் மட்டும்..

0 comments: