RSS

Thursday, September 30, 2010

கிள்ளை உள்ளம்..!!


மற்றோர் இருக்க
எனை நாடி
என்னோடு இருந்தும்
எங்கோ நின் கவனம்..!

என் அருகாமை
கிட்டியதும்
அடுத்தது நோக்கி
உன் மனம்..!

என் முக பாவங்கள்
உனை முற்றுகையிட்டும்..
முகம் நோக்காமல்
சிதறும் உன் ஆட்டச் சிந்தை..!

எப்படியாகினும்
என் மென்கோபம் தோற்கடிக்கும்
பொக்கைவாய்ப்
புன்னகைப்பூவின் முகம்..!!

--பூமகள்.

0 comments: