RSS

Sunday, September 5, 2010

நன்றி..!!

நன்றி கூறுவேன் என்று
நா எழ முயல..
விழியின்
பனித்துளி முத்தாகி
முந்தி நவிழ்ந்திருக்கும் நன்றி...

வறண்ட பாலையால்
நிரப்பப்பட்ட பூமிபோல்
நா முழுதும் வறண்ட
வாயில் வார்த்தை
வெந்திருக்கும்..

வெளி வந்த உஷ்ண
புகைச்சலில்
எரிந்து கொண்டிருக்கும்
உனக்கும் எனக்குமான
பாச சம்பாஷனை பற்றிய
ஊர் புரளிகள்..!!


-- பூமகள்.

1 comments:

விக்னேஷ்வரி said...

ரொம்ப உண்மையான வரிகள்.