RSS

Monday, February 21, 2011

தாயுமானவள்..!!


அதிகாலை என்றுமே
அப்படித் தான் ஆரம்பிக்கும்..

கண் மலர்ந்ததும்
மலரும் உன்னில்
என் பெயர்…

அழைப்பின் வேர்கள்
சமையல், தேடல்
என எதுவாகினும்
எனை அழைப்பதன்றி
முற்றுபெறாது உன் கேள்விகள்..

மிரட்டி, உருட்டி
காலை உணவு கொடுத்து
மதிய சாதம் வரை கட்டி
பையிலிட்டு அவசரகதியிலும்
அரவணைத்து வழியனுப்ப..

முதுகுச்சுமை பற்றி
பள்ளிக் குழந்தையாய்
நீ நடக்க..

ஒவ்வொரு காலையிலும்
முதல் நாள் பள்ளியனுப்பும்
மழலையின் தாயா ய்
கண்ணில் நீர் தெறிக்க
உன் தாயானேன் நான்..!!

--பூமகள்.

Wednesday, February 16, 2011

தளிர் நடை..!!

குளிர் பாறை தொடும்
பனித்துளி நீர் ஓடை..!!

கரை மணல் தீண்டும்
அலை கடல் மேடை..!!

மலைப் பள்ளம் விழும்
கதிரவன் ஒளி மாலை..!!

இவையாவும் தரும்
இன்பம் தோற்க்கடிக்கும்
மலர் பொன்னுடல்
ஆடி வரும் என்
அன்பு மகளின்
அன்ன நடை..!!