
அதிகாலை என்றுமே
அப்படித் தான் ஆரம்பிக்கும்..
கண் மலர்ந்ததும்
மலரும் உன்னில்
என் பெயர்…
அழைப்பின் வேர்கள்
சமையல், தேடல்
என எதுவாகினும்
எனை அழைப்பதன்றி
முற்றுபெறாது உன் கேள்விகள்..
மிரட்டி, உருட்டி
காலை உணவு கொடுத்து
மதிய சாதம் வரை கட்டி
பையிலிட்டு அவசரகதியிலும்
அரவணைத்து வழியனுப்ப..
முதுகுச்சுமை பற்றி
பள்ளிக் குழந்தையாய்
நீ நடக்க..
ஒவ்வொரு காலையிலும்
முதல் நாள் பள்ளியனுப்பும்
மழலையின் தாயா ய்
கண்ணில் நீர் தெறிக்க
உன் தாயானேன் நான்..!!
அப்படித் தான் ஆரம்பிக்கும்..
கண் மலர்ந்ததும்
மலரும் உன்னில்
என் பெயர்…
அழைப்பின் வேர்கள்
சமையல், தேடல்
என எதுவாகினும்
எனை அழைப்பதன்றி
முற்றுபெறாது உன் கேள்விகள்..
மிரட்டி, உருட்டி
காலை உணவு கொடுத்து
மதிய சாதம் வரை கட்டி
பையிலிட்டு அவசரகதியிலும்
அரவணைத்து வழியனுப்ப..
முதுகுச்சுமை பற்றி
பள்ளிக் குழந்தையாய்
நீ நடக்க..
ஒவ்வொரு காலையிலும்
முதல் நாள் பள்ளியனுப்பும்
மழலையின் தாயா ய்
கண்ணில் நீர் தெறிக்க
உன் தாயானேன் நான்..!!
--பூமகள்.
3 comments:
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html
அட.. அட.. தாய்மையை எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.
நியூட்டனின் 3ம் விதி
சூப்பர்!!..
Post a Comment