RSS

Sunday, May 1, 2011

உழைப்பாளர் திருநாள் வாழ்த்துகள்..!!




உலகம் துவங்கிய காலம் முதல்..
பாறை கல்லாகவும்..
கல் மணலாகவும்..
மணலில் உயிர் உருவாகவும்..

உயிர் அமீபாவாகவும்..
அமீபா இருசெல்லாகவும்..
இருசெல் பல்லுயிராகவும்..

எல்லாமும் ஆக..
எல்லாவிடத்தும் என்றும்
இருந்து கொண்டே இருப்பது..

இன்றும்.. என்றும்..
உருவாக்கங்களின் பின்னால்
உருவமற்று ஒளிந்திருக்கும்
ஓர் அற்புதம்..
உழைப்பு..

அவ்வுழைப்பின் மகத்துவம் போற்றாதோர் யாருளர்??

சாக்கடை அள்ளுபவர் முதல்..
சால்னா செய்பவர் வரை..

வீதி கூட்டுபவர் முதல்..
பத்தி விற்பவர் வரை..

தார் சாலை போடுபவர் முதல்..
கூரை போடுபவர் வரை..

படிப்பவர் முதல்..
படிப்பிப்பவர் வரை..

உழுபவர் முதல்..
பயிர் அறுப்பவர் வரை..



இன்னும் ஆயிரம் ஆயிரம் வேலைகள் தன் கடமை தவறாது உழைக்கும் மனிதம் ஏராளம்..

எல்லாரிடத்தும் குவிந்து கிடக்கும் உழைப்புக்கு என் வாழ்த்துகள்..!!


உலகத்தினைப் புரட்டிப் போடும் வன்மை கொண்ட உழைப்பை சீரிய முறையில் சிறப்புற செய்யும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த உழைப்பாளர் தின வாழ்த்துகள்..!!

உலகம் உண்மை உழைப்பாளர்களை என்றும் வணங்கட்டும்..!!

--பூமகள்.

0 comments: