RSS

Thursday, March 5, 2015

காய்ச்சல் காலம்..!

நோயில் வீழ்ந்து 
கடக்கும் நாட்களில்
நம் வீடு நமக்கே 
புதிதாய் தெரிகின்றன..!

கலைந்து கிடக்கும் பொருட்களும்
துவைக்கப்படாத துணிகளும்
நிறைந்திருக்க..
சொல்லப்படாத மெல்லிய
காதல் இழையோடும்
அன்பானவர் அருகிருப்பின்
ஆண்டுக்கிருமுறையேனும்
வந்து செல்லலாம்
கொஞ்சூண்டு
காய்ச்சலும்
தடுமனும்..!!

--பூமகள்..!

1 comments:

balaamagi said...

அழகான கவிதை, அருமையான வார்த்தைகள். அருமை. வாருங்கள் பாலமகிபக்கங்கள்.