
உனை எழுத நினைத்து
தோற்றுப் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
நான்..!!
வார்த்தைகளுக்குள் வராமல்
வழி மாறிப் போகிறாய்
நீ..!!
உனைத் தொடரவே
நான் பயணிக்க..
என் பயணங்களின் தூரம்
சொல்லாமல் செல்கிறது
காலம்..!!
வளைந்து, மறைந்து,
வேகம் கூட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறா ய்
நீ..!!
குழந்தைகள் விளையாட்டாய்
உனையடைய துரத்துகிறேன்
நான்..!!
இலக்கின்றி ஓடி
ஓர் இடத்தில்
நிற்கிறாய்..!!
மூச்சிரைக்கும் இதயங்கள்
பேசிக் கொள்கின்றன..!
நா ம் மௌனம் உடைக்க
முயல்கிறோம்..!
வழக்கம் போலவே
தென்றல் நமைப் பற்றி
மென்னிறகால்
கவிதை தூவிச் செல்கிறது
நம்மிருவருக்குமிடையே..!!
--
பூமகள்.