RSS

Saturday, September 8, 2007

தோழியே உனக்காக...!!


முதன்முதலில்
மிரட்சியாய்
புது உலகின்
பிரவேசம்...
கல்லூரி முதல் நாள்..!!


உன் நட்பு
கொண்ட பின்பு தான்
நடக்கப் பழகினேன்
நிஜமாய்..!


மலையாய் நீ
இருந்தும்
வாழ்த்துவதென்னவோ
மடுவாகிய என்னை மட்டும்
எப்போதும்...!!


என்
சாதனைகளை
சாத்தியமாக்கும்
சக்தி கொடுத்தது - உன்
சுகந்த வார்த்தைகளே...!


ஏணியாய்
இருந்து
எனை உயர்த்தி
எட்டியிருந்து
ரசிக்கும் உன்
நெஞ்சம்..!!


ஏழையாய் நான்
இருந்தும்
சீமானாக்கும்
நமக்கான நட்பே.....!!


கேட்காமலேயே கொடுக்கும்
உன் கைகள்...!
கேட்டேவிடுவேன் எப்படி
கேட்டது
என் மனச்சத்தம்
உனக்குள் என்று....???!!!!


தோழியே...ஆயிரம்
நட்பை தூசியாக்கும்
நமக்கான புரிதல்கள்...!!

தூரங்கள் மைல்களிலே தான்..!
நமக்கான தூரங்கள்
இதயத்தின் சுவர்கள் மட்டுமே...!


பாதைகள்
பிரிந்தாலும் என்
வழியில்
நம் நட்புடனே
பயணிக்கிறேன்...!!


(குறிப்பு :
என் உயிர் தோழி ஒருவரின் அன்பினால் ஆட்கொண்டு எழுதிய கவி இது..! இந்தக் கவிப்பூவை அவளுக்கும் எனக்குமான நட்பிற்கு சமர்பிக்கின்றேன்..!)

-பூமகள்.

0 comments: