![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6_k4bLzU7ySyqXFM2epeP7As0JNr8O_ZYnKxioi2Sh0B3ZWJjNbzPq2yz-L36251MMqaV5mNfsCfnqe2YcEPfvt07thJxyryWhMbNWsqX5W-H9wsTzHlDFnNX-8ZhbPU3HFRSMmzJpg/s400/Parson_Mothers_Love.jpg)
வாஞ்சையாய் வைத்து
கருவறை
வகுப்பறையில்
வித்தை பல
பயிற்றுவிக்கும்
கற்பிணி ஆசான் நீ...!!
துடிப்பை உணர்ந்து
வயிற்றைத் தடவி
துள்ளல் அடக்கி
துயிலவைக்கும்
மென்மையின் இதம் நீ...!!
உயிர்கொண்டு என் மீது
உணர்வோடு நித்தம்
உரையாடும் சத்தம்
தொப்பில் கொடி உணவுடனே
தகவல் பரிமாறும்
தகவல் தொழில்நுட்பம் நீ...!!
கருவறையில் நான்
கபடிவிளையாடி
உதைத்து வலித்தாலும்
வலிதாங்கி செல்லமாய்
இடுப்பைப் பிடித்து
வெட்கிச் சிவக்கும்
செவ்வாம்பள் மலரும் நீ..!!
குமட்டிக் குமட்டி
எல்லாம் கொட்டி
தலைசுற்றிப் போனாலும்
திட்டாமல் எனைத்
தாங்கும்
தன்னிகரற்ற உன்னதம் நீ...!!
'மலர்'முகம் காண
மாத்தவம் கொண்டு
மாவலி கண்டு
இம்சையை இச்சையாய் ஏற்று
பூமகளை பூவாய்
இப்பூமியில் பெற்றெடுத்த
பூமாதேவியும் நீ....!!
-பூமகள்.
0 comments:
Post a Comment