RSS

Sunday, September 9, 2007

பிச்சைக்காரி...!!

பிச்சையெடுக்கும்
பிஞ்சுக் கைகள்
பிறந்ததே பாரமாய்
சுமக்கும் தாயின்
உடலும் உள்ளமும்...!

கங்காரு குட்டி போல்
கட்டியிருக்கும்
பிரியா பந்தம்..!

வேலையின்றி
வேலை செய்யும்
தெம்பிருந்தும்
பிச்சை கேட்கும் தாயே??? - உனைப் போல்
சோம்பேறிப் பிள்ளை
வளர்க்க எண்ணமா???

வியர்வை சிந்தி
வேலை செய்து
வாழ்ந்தால் உனை
வியந்து பார்க்கும்
உலகமல்லவா???!!!!!


காசு கேட்டு
காலம் தள்ள
சுடவில்லை
மனம் உனக்கு????

விருந்து கேட்காதே.. - இனி
வேலை கேள்..!
விருந்து படை உன்
வியர்வை வைரங்களால்!
-பூமகள்.

குறிப்பு:


நான் ஒரு சமயம் வெளியில் சென்றபொழுது ஒரு நிகழ்ச்சி என்னை பாதித்தது. அதன் தாக்கமே இக்கவிதை.

கடைத்தெருவில் ஒன்றரை வயது குழந்தையை வயிற்றைச் சுற்றி துணியால் கட்டிக் கொண்டு பிச்சைகேட்டாள் என்னிடம் ஒரு பிச்சைக்காரி..!
அவளின் நிலை கண்டு எனக்கு பரிதாபம் வரவில்லை. மாறாக கோபம் வந்தது. அதன் வெளிப்பாடே இந்தக் கவி. அதற்காக என்னை யாரும் இறக்கமில்லாதவள் என்று நினைக்கவேண்டாம். அவள் மிகவும் பலசாலியாகவே இருந்தாள், ஊனம் கூட இல்லை. ஆகவே தான் என்னால் கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.

இதோ இங்கே அந்தக் கவி உங்களுக்காய்..!

2 comments:

Tamilan said...

அருமை பூமகளே அருமை!!!!!!!!

பூமகள் said...

நன்றிகள் தமிழன். ;)