RSS

Monday, May 26, 2008

எவை இனிமை?

இனிமையானது தான்..
பரண் ஏறி
ஏதோ தேடும்..
பொழுதுகள்..

ஏதோ தேட
எத்தனிக்க..
எதேதோ அகப்பட்டு
நிதர்சன நிமிடங்களைத்
திருடிச் செல்லும்..

ஏடு தூக்கும் காலத்தில்
மழலைக் கையெழுத்தில்..
முதன்முதலில்
கிறுக்கிய ஐந்துமாத
கவிக்குழந்தை..

ஆரம்ப பள்ளி
புத்தகங்களின் இடையில்..
ஏதோ ஒரு வகுப்புத்தோழி
ரகசிய கிசுகிசுப்பில்..
குட்டி போடுமென
பத்திரப்படுத்தி வைக்கச் சொன்ன
மயிலிறகு பீலிகள்..

தினக்குறிப்பேட்டில்..
மனம் குறித்து வைத்த
ரகசிய குறியீடுகளோடான
பனிரெண்டாம் வகுப்பு..
ஆட்டோகிராப்புகள்..

இத்தனையும் கண்ணுற்று..
நிஜத்துக்கு வருகையில்..
மறந்தே போயிருக்கும்..
எதை தேட பரண் ஏறினேன்..??
__________________
--- பூமகள்.

0 comments: