RSS

Friday, May 9, 2008

காலன் தீண்டிய கயலரசி



காலன் தீண்டிய கயலரசி..

முத்து பல் சிரிப்பாலே
மனம் மயக்கிய இளந்தளிரே..!
முனைப்பின்றி போனதேனோ - உந்தன்
மலர்விழி மூடி உறங்கத்தானோ??!

எடுத்து வைத்த சிற்பமே.. நீ
செய்யும் வேலை சித்திரமே..!
எழுச்சியின்றி போனதேனோ - எங்களை
அழ வைத்துப் போகத்தானோ??

அமைதியின் இருப்பிடம்.. நீ
பாசத்தின் பதிப்பிடம்..!
உன் பாசம் படிந்த நாட்களெண்ணி
உடைந்து அழுது போகத்தானோ??

கலைமகளின் கடைக் கண்
கிட்டாதென்று மரணமேன்??!
கலையரசி நீ நினைத்தால்
எட்டாததும் உண்டோ??!!

ஓராயிரம் கதை பேசி
ஒன்றாய் விளையாடிய
ஓயாத நினைவலைகள்
ஓடி வந்து தளும்புதே..!!

சிந்திய சிரிப்பொலியும்..
சீரிய உன் பண்பும்..
சிந்தை விட்டகலவில்லை..
சிந்திய கண்ணீரும் அடங்கவில்லை..!

அத்தை மகள் அட்சயமே..
அன்பு வீற்றிருக்கும் நாட்டியமே..!
கண்ணீரோடு ஏன் துமைந்தாய்..? - உன்
முடிவெழுதி ஏன் போனாய்??

கோலம் போடும் கோதரசி..
கண்கள் பாடும் கவியமுதே..
கோதை மன பலமெங்கே??
கோமதி உன் மதி எங்கே??!!

ஆறடி கூந்தலழகி.. உன்
ஆறறிவு.. போனதெங்கே??!!
அரைநிமிட அழுத்தத்தில்
அழிவெழுதி போனதேனோ??!!

அமைதியாய் கண்ணுறங்கு தளிர்பூவே - உன்
ஆன்மா துயரின்றி துயிலுறங்க
ஆண்டவனைப் பிராத்தித்து இந்நிலை
அடுத்திங்கு வராத வரம் கேட்பேன்..!

__________________
--- பூள்.

0 comments: