RSS

Monday, June 30, 2008

உலக அன்னையருக்காக பூவின் சின்ன சந்தப் பூச்செண்டு..!

தாரே சமீன் பர் - நிலத்தில் (பூக்கும்) நட்சத்திரங்கள்

இந்த படத்தின் மிக முக்கிய பாடல்களில் மகத்தான பாடலாக நான் கருதும் பாடலான "மேரே மா....!!" - பாடலை சந்தங்களுக்குத் தக்க படி அப்படியே அர்த்தம் மாறாமல் மொழியாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறேன்..

ஒரு சில வார்த்தைகள் சரியாக அர்த்தமறியாவிடினும்.. (மன்னியுங்கள் ஹிந்தி ஆர்வலர்களே..)

உலகத்தின் அனைத்து அம்மாவும் இந்த மழலையின் சின்ன அன்பு காணிக்கை..!







பாடல் வரிகள்:

(பல்லவி)

நான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும்
இருளைக் கண்டு பயந்துடுவேனம்மா..

நான் எதையுமே காட்டுவதில்லையே..
உன் அருகாமை விரும்புவேனம்மா...


உனக்கு எல்லாம் தெரியும்
தானேம்மா..??

உனக்கு எல்லாம்............
தெரியுமே என் அம்மா...!!

(சரணம் - 1)


கூட்டத்தில் என்னைத் தனியே விட்டாலுமே
வீட்டை தேடி வரவே முடியாதேயம்மா..

எத்தனை தூரமென்னை விட்டாலுமே.
நீ என்னை மறக்க மாட்டாய் இல்லம்மா..??!!

நான் இத்தனை மோசமா சொல்லம்மா...
நான் இத்தனை மோசமா சொல் என் அம்மா...!!


(சரணம் - 2)

எப்போதெல்லாம் அப்பா என்னை
மேல்தூக்கியே விளையாடும் போதெல்லாம்மா...

என்னருகிலே நீயிருப்பாயே.. நான்
வந்து உனை அணைச்சி கொள்வேனேம்மா..

அப்பாக்கிட்ட சொல்லியதில்லையே... - ஆனா
நான் உடைஞ்சு போயிடுவேனேயம்மா..

முகத்தில் நான் காட்டியதில்லையே...
மனசில் பயந்து நடுங்கிடுவேனே அம்மா...


உனக்கு எல்லாம் தெரியும்
தானேம்மா..??

உனக்கு எல்லாம்............
தெரியுமே என் அம்மா...!!

நான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும்
இருளைக் கண்டு பயந்துடுவேனம்மா..

நான் எதையுமே காட்டுவதில்லையே..
உன் அருகாமை விரும்புவேனம்மா...


உனக்கு எல்லாம் தெரியும்
தானேம்மா..??

உனக்கு எல்லாம்............
தெரியுமே என் அம்மா...!!

எழுத்தாக்கம்: பூமகள்

0 comments: