RSS

Tuesday, July 8, 2008

நட்புக்காக..!




புன்னகை
தேடும்
பொன் தேர் நீ..!

மகிழ் மனம்
தேடும்
மலைத் தேன் நீ..!

பூக்கள்
தேடும்
தேனீ நீ..!

நெருஞ்சியாய்
குத்தாத
குறிஞ்சி நீ..!

ஊடல்
நட்பிற்கும்
பொதுவென
உணர்த்தியது நீ..!

வார்த்தைகளின்
நிசப்தத்தில்..
நட்பை நிரப்ப
கற்பித்தது நீ..!

ஆர்ப்பரிக்கும்
அலையாயினும்
அவையடங்கும்
ஆழ்கடல் நீ..!

அகங்கண்டு
பேசும்
அழகுவிந்தை நீ..!

பகர்ந்தது
புரிந்ததும்..
பகராதது
தெரிந்தும்..
எழுதும்
நட்பிலக்கியம் நீ..!

இன்னும் சொன்னால்
அடிப்பதும் நீ..!!

என்னென்று வாழ்த்த..
என்றென்றும்
பல்லாண்டு
புன்னகையில்
வாழி நீ..!!

-பூமகள்.

0 comments: