RSS

Sunday, August 31, 2008

உன் அழுகை..!

அழுது கொண்டிருந்தாய்
நான் உன்னை
முதன் முதலாக
பார்க்கையில்..

ஆதரவு கரங்கள் தேடி..
கைகள் அசைத்து..
கண்கள் இறுக்கி..
கண்ணீர் வழியாத
உன் அழுகை..

சோகத்துக்கு பதில்
மகிழ்ச்சியை வரவழைத்தது..

ஆம்..
அப்போது தான்
என் கைகள்
பூமியுடனான
உனது பந்தத்தை
எழுதி முடித்திருந்தது..


(மழலை மொட்டுகளை மலர வைக்கும் மருத்துவ பிரம்மாக்களுக்காக..!!)

0 comments: