RSS

Friday, August 8, 2008

மகிழம்பூ மனசில் பூக்கும் பூக்கள் எத்தனை..?!!


தமிழில் சங்க காலத்தில் வழங்கப்பட்ட மலர்களின் பெயர்கள் சமீபத்தில் ஒருதிருமண மண்டபத்தில் மணமக்களை வாழ்த்த கொடுக்கப்பட்ட புத்தகத்தில்அமைந்திருந்தது.படித்ததும் பூமனம் இதழ் விரித்து புன்னகைத்தது.. எத்தனை நாட்கள் இதனைத் தேடியிருப்பேன்..!


அந்த நறுமணத்தை உங்களில் வீச இதோ வருகிறது நூறு பூக்களின் அணி வகுப்பு..!!


ஒரு பூ காணலை… அதற்கு பதில் இந்தப் பூமகளை ஒன்றாக கருதிக் கொள்ளலாம் தானே??!!
  1. காந்தள்
  2. ஆம்பல்
  3. அனிச்சம்
  4. குவளை
  5. குறிஞ்சிப்பூ
  6. வெட்சி
  7. செங்கொடுவேரி
  8. தேமா
  9. செம்மணிப்பூ
  10. பெருமூங்கிற்பூ
  11. கூவிளம்
  12. எறுளம்பூ
  13. மராமரம் பூ
  14. கூவிரம்
  15. வடவனம்
  16. வாகை
  17. வெட்பாலைப்பூ
  18. செருவிளை
  19. கருவிளம்பூ
  20. பயனி
  21. வாணி
  22. குரவம்
  23. பச்சிளம்பூ
  24. மகிழம்பூ
  25. சாயாம்பூ
  26. அவிரம்பூ
  27. சிறுமூங்கிற்பூ
  28. சூரைப்பூ
  29. சிறுபூளை
  30. குன்றிப்பூ
  31. குருகலை
  32. மருதம்
  33. கோங்கம்
  34. மஞ்சாடிப்பூ
  35. திலகம்
  36. பாதிரி
  37. செருந்தி
  38. அதிரம்
  39. செண்பகம்
  40. கரந்தை
  41. காட்டுமல்லிகை
  42. மாம்பூ
  43. தில்லை
  44. பாலை
  45. முல்லை
  46. கில்லை
  47. பிடவம்
  48. செங்கருங்காலி
  49. வாழை
  50. வள்ளி
  51. நெய்தல்
  52. தாழை
  53. தளவம்
  54. தாமரை
  55. ஞாழல்
  56. மௌவல்
  57. கொகுடி
  58. சேடல்
  59. செம்மல்
  60. சிறுகும்குரலி
  61. வெண்கோடல்
  62. கைதை
  63. சிரபுன்னை
  64. கபஞ்சி
  65. கருங்குவளை
  66. பாங்கர்
  67. மரவம்
  68. தனக்கம்
  69. ஈஙகை
  70. இலவம்
  71. கொன்றை
  72. அரும்பு
  73. ஆத்தி
  74. அவரை
  75. பகன்றை
  76. பலாசம்
  77. அசோகம்
  78. வஞ்சி
  79. பித்திகம்
  80. கருதநாச்சி
  81. தும்பை
  82. துழாய்
  83. நந்தி
  84. நரவம்
  85. தோன்றி
  86. புன்னாகம்
  87. பாரம்
  88. பீர்க்கம்
  89. குருக்கத்தி
  90. சந்தனம்
  91. அகிற்பூ
  92. புன்னை
  93. நரந்தகம்
  94. நாகற்பூ
  95. நள்ளிருள்நாறி
  96. குறுந்தகம்
  97. வேங்கை
  98. எருக்கு
  99. ஆவாரம்பூ
குறிப்பு:

மொத்தம் எத்தனை பூக்கள் உள்ளன எனத் தெரியவில்லை.. ஏதேனும் தவறு அல்லது விடுபட்டிருந்தால் சான்றோர்கள் இங்கு சொல்லித் திருத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்..!

1 comments:

ஜுனைத் ஹஸனி said...

poo. idhellam unake overa illa. indha annan kita soli irukiya unnoda blogspot pathi.
www.junaid-hasani.blogspot.com
naangalum blog spopt wachi irukomla. engalukum konjam wandhu help panradhu.