RSS

Thursday, October 17, 2013

துளித்துளியாய்..! - 2

மழையின் வெள்ளத்தில்
அடித்துச் செல்கிறது
மனத்தின் வெப்பம்..!!

&&&&@@@@&&&&&

இடியின் இடிபாடுகளின் வழி
மேக முறைப்புகளுக்கு பயந்து
தம் துயரெல்லாம் கவிழ்ந்து வடிக்கும்
ஓர் செம்பருத்திப் பூவின்
மகரந்தத்தில் ஒடிங்கியிருக்கும்
ஓர் மழைத் துளி..!

&&&&

இருளெல்லாம் நனைக்கிறது
இரவுப் பணி முடித்து
எழுப்புகிறது விடியலை - மழை..!!

--பூ.

துளித்துளியாய்..!!


தூரத்து பனிச்சிகரத்திலிருந்து
உருளும் ஒற்றைப் பனித்துளியாய்
கடந்து கொண்டிருக்கும்
காலமும் காற்றும்
உன் கவிதைகளை
நினைவுச்சிகரத்திலிருந்து
கடத்திக் கொண்டேயிருக்கின்றன
சுவடுகள் விட்டதை அறியாமல்..!!

--பூ.

&&&&&&

மழை தனித்து வருவதேயில்லை..
கொஞ்சும் மேகத்தோடு
இடி இசையில்
உன் நினைவுகளையும்
பொழிந்துவிடுகிறது என்னில்..!!

--பூ.

&&&&&