RSS

Saturday, September 10, 2016

சிறுபிரிவின் கணப்பொழுதில்..!

இரவென்னும் பெருவெளியில்
கடந்து சென்ற கனவுகள்
உன் நினைவெழுப்பி விட்டுவிட
கொட்டக் கொட்ட விழிப்பில்
நான்..!

கதவோரச் செருப்பும்
கொக்கியிலிட்ட உன் உடையும்
எடுக்காமல் காக்கிறேன்..
உன்னிருப்பையே
எதிர்வீட்டவரும் நம்பட்டுமே..!

குட்டியிட்ட பூனை போல்
வீட்டினுள்ளே சுற்றுகிறேன்..
அறைகளின் ஒவ்வொரு இடுக்கிலும்
இறைந்திருக்கும் ஓர் பொருளேனும்
உனதிருப்பை உணர்த்தும்..

கடிகார முள்ளெல்லாம்
கீரீச்சிட்டு நகர்கிறது
இரைச்சலோடே நொடியெல்லாம்
காதடைக்கக் கடக்கிறது..

உன் அன்புணர்த்தும்
இதுபோன்ற சிறுபிரிவே
நிஜமான உறவுகளையும்
நமக்கே தான் காட்டிடுமே!

--பூ.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை நன்று
வாழ்த்துக்கள்

பூமகள் said...

Thank you