இரவென்னும் பெருவெளியில்
கடந்து சென்ற கனவுகள்
உன் நினைவெழுப்பி விட்டுவிட
கொட்டக் கொட்ட விழிப்பில்
நான்..!
கதவோரச் செருப்பும்
கொக்கியிலிட்ட உன் உடையும்
எடுக்காமல் காக்கிறேன்..
உன்னிருப்பையே
எதிர்வீட்டவரும் நம்பட்டுமே..!
குட்டியிட்ட பூனை போல்
வீட்டினுள்ளே சுற்றுகிறேன்..
அறைகளின் ஒவ்வொரு இடுக்கிலும்
இறைந்திருக்கும் ஓர் பொருளேனும்
உனதிருப்பை உணர்த்தும்..
கடிகார முள்ளெல்லாம்
கீரீச்சிட்டு நகர்கிறது
இரைச்சலோடே நொடியெல்லாம்
காதடைக்கக் கடக்கிறது..
உன் அன்புணர்த்தும்
இதுபோன்ற சிறுபிரிவே
நிஜமான உறவுகளையும்
நமக்கே தான் காட்டிடுமே!
--பூ.
கடந்து சென்ற கனவுகள்
உன் நினைவெழுப்பி விட்டுவிட
கொட்டக் கொட்ட விழிப்பில்
நான்..!
கதவோரச் செருப்பும்
கொக்கியிலிட்ட உன் உடையும்
எடுக்காமல் காக்கிறேன்..
உன்னிருப்பையே
எதிர்வீட்டவரும் நம்பட்டுமே..!
குட்டியிட்ட பூனை போல்
வீட்டினுள்ளே சுற்றுகிறேன்..
அறைகளின் ஒவ்வொரு இடுக்கிலும்
இறைந்திருக்கும் ஓர் பொருளேனும்
உனதிருப்பை உணர்த்தும்..
கடிகார முள்ளெல்லாம்
கீரீச்சிட்டு நகர்கிறது
இரைச்சலோடே நொடியெல்லாம்
காதடைக்கக் கடக்கிறது..
உன் அன்புணர்த்தும்
இதுபோன்ற சிறுபிரிவே
நிஜமான உறவுகளையும்
நமக்கே தான் காட்டிடுமே!
--பூ.
3 comments:
கவிதை நன்று
வாழ்த்துக்கள்
I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Thank you
Post a Comment