RSS

Wednesday, April 16, 2008

போராட்டம்..!!

ஆரம்பிச்சாச்சென சொன்னது
விழிகளிரண்டும்..!!
கண்ணாமூச்சி ஆடி..
களைத்துவிட்ட கடைவிழியில்
முத்தாக படிந்தது பதநீராக
பாவை நீர்...!!

போராடி விழுந்த
விழுப்புண்ணுமில்லை..!
போராட்டம் நிகழ்ந்த
தடையமுமில்லை..!

களைப்படைந்த கண்கள்
புரியாமல் முழிக்கும்..!!
கணினி பொறியாளியா??
இல்லை - நான்
களத்தின் போராளியா??!!
__________________
~பூள்.

0 comments: