இசையினூடாய் மிதந்த உன்னை
செவியேந்தி சிந்தை சேர்க்க..
முரண் படர்ந்த நிதர்சனம்
முனகலோடு விழுங்கப் பார்த்தது..
இரவெல்லாம் நனைந்த
காகிதப் பூவின் இதழ்
ஈரமற்றதாக்க தனைச்
சூரியனில் காட்ட எத்தனிப்பதைப் போல்..
ஓயாது பெய்த பெருமழையொன்றின்
ஒப்பாரியூடே நனைந்து நின்று
உனைக் கழுவி எனை மீட்டுக்கொண்டிருந்தேன்..
மழையடித்தோடிய வெள்ளமதில்
கால் விரல் விடுத்து
உருண்டு கொண்டிருந்தது
பேரழுகுரலொன்று.. அது மீண்டும்
நினைவூட்டி வதைத்தபடியே
எங்கோ சென்றது
உனைப் போலவே..!
--பூ
0 comments:
Post a Comment