RSS

Saturday, October 13, 2007

இளைய சமுதாயத்துக்காக ஒரு பாடல்..!!

எந்த பாடலின் தாளத்தில் எழுதியிருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன்...!! அதை நீங்களே கண்டு பிடித்துச் சொல்லுங்களேன்.....!!

இதோ என் கவி வரிகள்...!!


(பல்லவி)

சின்ன பொடிப் பயலே...
சூராவளிப் புயலே...
எங்கே உன் பள்ளி...??
படிச்சா நீ கில்லி...!!

எங்கே உன் பள்ளிப்புத்தகம்..??
படிச்சாக்கா நீயும் வித்தகன்...!!
போ போ என கூறுவதேனப்பா..??
சொல்லப்பா சொல்லப்பா... - பள்ளி நீயும்
செல்லப்பா செல்லப்பா....!!


(சரணம்)

கல்லூரி போகையிலே....
கன்னியர பார்க்கையிலே...

'செல்'லாலே பேசயிலே..
கண்மூடி ஆசையாலே...

உன் மனசும் பின்னால் போகும்
போயிட்டா திரும்பாது.......!!
அனுப்பிட்டு நீயும் அழுதா...
வாழ்க்கையும் இருக்காது....!!

காதல படிக்கும் போது படிச்சு நீயும் பார்க்காதேன்னு - நான்
தெரிஞ்சவ சொல்றேன் தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ......!!
விவரமா பொழச்சிக்கோ பொழச்சிக்கோ....!!


(பல்லவி - சின்ன பொடிப் பயலே..)

(சரணம்)

சுற்றுலா போகையிலே...
நட்போடு சுத்தயிலே...

கூடாத செய்கையாலே...
கிட்ட வருமே மெல்ல....

சிகரெட்டும் சிநேகிதமாகும்
அதைநீயும் சீண்டாதே...!!

மதுவுமே மயக்கிப்பாக்கும்
மயங்கினா மிஞ்சாதே...!!

வீதியிலே நீயும் போனா எல்லாருமே உன்னையுந்தான்... - 'மா.......மனிதன்னு'
சொல்லனும்... கேளப்பா கேளப்பா...
சாதிச்சு நீ காட்டப்பா காட்டப்பா...!!


(பல்லவி - சின்ன பொடிப் பயலே..!!)

ஆ... தன்னனா... தன்னனா.......
தான தன்னனா.. தன்னனா.....!!

-பூமகள்.

0 comments: