RSS

Thursday, October 17, 2013

துளித்துளியாய்..!!


தூரத்து பனிச்சிகரத்திலிருந்து
உருளும் ஒற்றைப் பனித்துளியாய்
கடந்து கொண்டிருக்கும்
காலமும் காற்றும்
உன் கவிதைகளை
நினைவுச்சிகரத்திலிருந்து
கடத்திக் கொண்டேயிருக்கின்றன
சுவடுகள் விட்டதை அறியாமல்..!!

--பூ.

&&&&&&

மழை தனித்து வருவதேயில்லை..
கொஞ்சும் மேகத்தோடு
இடி இசையில்
உன் நினைவுகளையும்
பொழிந்துவிடுகிறது என்னில்..!!

--பூ.

&&&&&

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

துளித்துளியாய் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

அழகிய கவிதை வரிகள்! அருமை!

'பரிவை' சே.குமார் said...

ரசிக்கக் கொடுத்த இரு துளிகளும் அருமை...
வாழ்த்துக்கள்.