RSS

Thursday, November 15, 2007

அக்னி என்ற தலைப்பில் பூமகள்

அக்னி என்ற தலைப்பில் பூமகள் பற்றிய அறிமுகம்..!


நான் பூமகள்...!

புதிதாய் பிறந்த
அக்னிப் பிழம்பை
இதழாக்கி வந்தவள்..!!

நேசத்தில் மெந்தீபம்..!
நெருடினால் தீப்பந்தம்..!

உண்மைக்கு உற்றவள்..!
பொய்மைக்கு ஊசியிவள்..!

பூவைப் பெற்றெடித்த
பூந்தாய் அன்பின் எரிமலை..!

பூந்தந்தை அறிவின் எரிமலை..!

பூந்தமையன் பேசா வன்மலை..! -ஆயினும்
பவித்திர சுடர்மகன்..!

நான் பூமகள்...!!

பூ இங்கு நெருப்புக் கொத்தாய்..!
பூ விரும்புவது கவிநெருப்பு சத்தாய்..!

பூ படிக்க விழைவது தாவர நுண்ணியல்...!
படித்தது கண்ணில் தீப்பொறி பறக்கும் கணினி பொறியியல்..!

நான் பூமகள்..!!

***************************************************

நான் பூமகள்..!

அக்னி சிறகுகளை
உருவாக்க
வறுமைவலி பொறுத்தவள்..!

தேளாய்க் கொட்டும்
தீயோரை நெருப்பாய்
சுட நினைப்பவள்..!

நான் பூமகள்..!

அறிவின் அக்னியை
எங்கேனும் கண்டால்
ஜூவாலையில்
ஐக்கியமாகிவிடுபவள்..!


எப்போது வெடிப்பேனென்று
தெரியாத அமைதியான
சுனாமி..!


தீங்கு கண்டு
பொங்குபவள்..!
தன்னைத் தாக்கினாலும்
தகர்ப்பவள்..!

நான் பூமகள்..!

~ பூமகள்

0 comments: