RSS

Monday, November 5, 2007

தீபத் திருநாள்..!








தீப ஒளி எங்கும் மேவ
தீபாவளி வந்தததுவே..!

பட்டாசு வெடிகளில்
பிரபஞ்சம் மறக்கலாமோ??

ஓசோன் மழலை வயிற்றில்
ஓட்டையாக்கும்
ஓங்கியொலிக்கும்
ஓய்யார புகைவெடி தேவையா??

கொஞ்ச புகையும்
மிஞ்சா சத்தமும்
நெஞ்சை அதிரா வெடியில்
பிஞ்சின் மகிழ்வை
விஞ்சியது உளவோ??

வெடித்து பின்
தவிப்பது தகுமோ?
பார்...!
தாங்குமோ பார்??

ஆகாயத்து நட்சத்திரங்களை
கூரை ஓட்டையின் வழி
கண்டு எண்ணும்
ஏழையின் வீட்டில்
விருந்து படைத்து
விமர்சியாய் கொண்டாடலாமே??

பளிச்சிடும் தீப ஒளியில்
பள்ளி செல்ல ஏழை மழலைக்கு
கல்வி ஒளி ஏற்றலாமே??

சிந்தித்தால் தடுக்கப்படுவது
பிரபஞ்ச நஞ்சும்
புதிதாய் தொடுக்கப்படுவது
பாச மனித நேயமும்..!

-பூமகள்.


0 comments: