RSS

Tuesday, March 3, 2009

பொழுதுகள்..

போகும் ஒவ்வொரு
கணமும் சொல்லும்
இழந்து விட்ட காலத்தையும்
இழக்கப் போகும் காலத்தையும்..

அந்த பொழுதின்
நிரந்தரமற்ற தன்மையில்
நிரம்பியிருக்கும்
நிதர்சனத்தின் நிழல்..

உழைக்காமல் தூங்கும்
திண்ணை தூங்கிகளின்
வாழ்க்கையில்
இல்லாமலே போகும்
இவ்வாறான பல
'வெட்டி'ப் பொழுதுகள்..

இவ்வகை
வெறும் பொழுதுகளை
வெட்டினவர்களே
காலத்தின் பொன்னேட்டில்
வாழ்பவர்கள்..!!

_______________
பூமகள்.

0 comments: