RSS

Tuesday, February 12, 2008

ஈரவெளிக் காற்று..!

ஈரவெளிக் காற்று..!



குறுக்கு பாதையில்
சூழல் கிரகித்து
நடைபோடுகிறேன்..!

மார்பளவு சுவற்றில்
வண்டி பிடித்து
ஏறி நின்று..

அக்கா கை பிடித்து
அனிச்சையாய்
அநாயாசமாய்
நடைபழகும் மழலை..!


வேறு திசையில்
பெரியவர் நின்றிருக்க..
பிஞ்சு விழும் பதைப்பு
நெஞ்சில் எழுந்து
என்னை ஆட்டுவிக்கிறது..!


குறுகுறு பார்வையில்
எனைக் கண்டு
குறும்பாய் சிரிக்கிறது
இளம் தளிர்கள்..!


வரும் துயர் எண்ணி
அஞ்சி அழைத்துச்
சொல்லி என் வழி
செல்கிறேன்..!

ஏங்கும் விழிகளோடு
சோகமாய் பார்க்கும்
ஈரவிழிகள்..!


நிம்மதி பெருமூச்சு
நெஞ்சில் வந்தாலும்
எங்கோ ஓர் ஓரத்தில்
மழலையின் கண்கள்
கேட்ட கேள்விக்கு
விடை சொல்ல
இயலாமல் இன்னும்
நான்...!!
__________________
~பூள்.

0 comments: