கருத்த காலம்..!வெளிச்சம் தேடி
விழி சென்ற
திக்கெல்லாம்
இருள் அப்பி
திரும்புகிறேன்..!
ஓரத்தில் பெயர்ந்திருக்கும்
சுவரின் பூச்சு..
சுவாசத்தில் சேறு பூசி
சிரித்தது போல்
திணறும் மூச்சு..!
பட்டினியின் பற்கள்
கணுக்கணுவாய் சுவைக்கும்
அணுவை அனுவும்..!
மூன்று நாள்
இருவேளை மேக்கியோடு
தலைசுற்றி இரைதேடி
சாலை கடக்க
சோ(சா)தனை முயற்சி...!
திட்டும் வாகனவோட்டிக்கு
புரியுமா என் பசிச்சுற்றல்??
அறைத் தோழி
அலுவல் செல்ல..
வெறுமை அறைந்து
அழ வைக்கும்..!
சந்தை என்று
வந்த பின்னே
பல்லு பிடித்து
பார்க்கும் உலகம்..!
ஒவ்வொரு இரவும்
ஓராயிரம் வலியோடு
அடுத்த நாளுக்கு
தயாராகும் மனம்..!
யாரும் இல்லாவிடினும்
நிதம் அருகில்
வந்து வாலாட்டி ஓடும்
வேப்பமர அணிலைப்
போலவே வாழ்க்கையும்..!
__________________
~பூமகள்.
~பூமகள்.
0 comments:
Post a Comment