RSS

Saturday, March 8, 2008

அம்மா..!

தாயே நீ சொல்லும்
ஒவ்வொரு சொல்லும்
என்னை உயிர் தொட்டு
உரசிச் செல்கிறது..!

உறவுகளின் உள்முகத்தில்
இன்பம் செதுக்கி
உன் இனிமை காணுகையில்
எனை மறந்து களித்திருக்கிறேன்..!

எங்கோ தொடங்கும்
உரையாடல் உன்
மென்னுளம் காட்டி
விடைபெற்றுச் செல்லும்..!!

பருப்பு ரசப் பக்குவமும்
பாங்காக பேசும் உன்
வெகுளித்தனமும்
வெள்ளந்தி மனமும்
என்னோடு சீராக
அனுப்பி வைப்பாயா
அம்மா..!!

(கவிச்சமரில் நொடிப்பொழுதில் தோன்றிய கவிதை)

-பூமகள்.

0 comments: