RSS

Monday, March 3, 2008

மாய சந்தோசமே..!!

நிம்மதியுடனான எனது
உடன்படிக்கை
நிராகரிக்கப்பட்டது என்று
என்னை விட்டு நீ
பிரிந்தாயோ அன்று...!

ஆழ்ந்த உறக்கத்தில்
உன்னை யோசித்த நினைவுகள்
முள்ளாய் கண்ணில்
குத்தும்..!

அடுத்து வருவாயோ
வளம் தருவாயோ என்று
நெஞ்சம் விம்மி
நெருப்பில் கனக்கும்..!

என்னதான் உறவானாலும்
உன் உறவு இல்லையெனில்
வேசமாகும் பாசங்கள்..!

எப்போது வருவாய்
காகிதத்தில் படபடக்கும்
எல்லோருக்குமான
மாய சந்தோசமே..!!
-பூமகள்.
(ஒரு சில வினாடிகளில் கவிச்சமரில் தோன்றிய கவிதை.. உங்களுக்காக..!)

0 comments: