கலைந்த புன்னகைகள்..!!
எப்படி இருக்கே..
இந்தியாவில் பார்த்தது..
எப்போ இங்கு வந்தே...!!
(கண்கள் பார்த்து தோழி கேட்டு நின்றாள்)
இப்ப தான் மேரேஜ் ஆச்சு..
உன்ன பார்ப்பேன்னே நினைக்கல..
எப்படி இருக்கே நீ??
ஏதும் விசேசம்??
(எண்ணவோட்டத்தை பிடித்து பதில் கொடுத்தாள்)
ஆமாம்.. இப்ப தான் கன்பார்ம் ஆயிருக்கு..
2 மாசம்..
(நாணம் செவ்விதழில் சிந்தி பளிங்கு முழுக்க சிதறியது)
(வெட்கி சிவந்து, பின் அவளே பேசலானாள்.)
இந்தியாவே பார்ப்பது மாதிரி உன்ன பார்த்தது..
வா உன்னோடு நிறைய பேசனும்..
கண்டிப்பா வர்றேன்..
ஆனா இப்போ இயலாத சூழல்..
அவர் காத்திட்டு இருப்பார்..
அவசரமா போனும்..!
(அலைபேசி இலக்கங்கள் இடமாறின..விடைபெற்று கிளம்பினேன்..)
ஒரு மாதமிருக்கும்..!
மீண்டும் காண்கிறேன்..!
ஹே... எப்படி இருக்கே??
(உற்சாகத்தில் நான்..!)
ம்.... இருக்கேன்..!
(விழியோரம் கசிந்தது நீர்த்துளி... வார்த்தையில் வெறுமையுடன் அவள்..)
ஏன் என்னாச்சு?
உடம்பு சரியில்லையா?
டாக்டரைப் பார்த்தியா??
(பதறிய மனத்துடன் நான்..)
போன வாரம் தான்
பார்த்தேன்.. கடைசியா..!!
(கடைசியா- இந்த வார்த்தையில் இருந்த அழுத்தம்
ஏதோ விபரீதத்தை உணர்த்தியது)
என்ன சொல்றே நீ??
(பதட்டம் குறையாமல் நான்)
என் பொண்ணை சாவடிச்சிட்டேன்..!
சாவடிக்க வைக்கப்பட்டேன்..!
(எங்கோ பார்த்து அழுகிறாள்.. என் கண் பார்க்க திராணியில்லை)
ஏன் என்னாச்சு??
ஏன் ஏன்??
(புரியாமல் மூச்சடைத்து நான்..)
பெண் பிறவி கூடாதாம்
பெரும் செல்வம் தின்னுமாம்..
வேண்டாம் என்று கை கழுவிட
தினம் நெருப்பில் சுட்டு பாரு காயம்..!
(வெந்த புண்ணை காலில் காட்டி.. துன்ப சுமையை என் நெஞ்சில் ஏற்றினாள்)
துடித்த இதழில்
தவித்து மறித்தன
வார்த்தைகள்..!!
(ஆறுதல் சொல்ல வார்த்தை எழவில்லை..!
கண்களால் பேசி..கரைந்து நகர்கிறேன்..!)
இங்கிலாந்தின்
இந்தியர் நிலையாக
ஓராயிரம் புன்னகை - நிதம்
கலைத்துவிடும் கதை
கருத்தாய்வுடன் மாண்பு
குலைத்து நிற்கிறது..!
செய்தி:
கருத்தாய்வு முடிவு: "இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்களிலிடையே
பெண்சிசுக்கருக்கலைப்பு அதிகமாகிறது.."
~பூமகள்.
0 comments:
Post a Comment