![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-hgVLHeL31FU-2UHIGHZFQl8txxeUlEnP4TPz47J4JDBWw4HE5u1_olgqVtUz-mKe2o1Hk5VaEvkwGgBafqlg0RgSp9o1d1Z2fB0xTPSSqPltSRhhqy7lK_pVqHSBjuIMGpx4xvr12Q/s320/watching_each_other.jpg)
புரியவில்லை விழிகளுக்கு..!!
திரும்ப திரும்ப
பார்த்து பார்த்து
தேடிக் கொண்டிருந்தன
அகன்ற விழிகள்
அர்த்தங்களின்
அர்த்தங்களையே..!!
உயிர் துளைக்குமளவு
தேடித் தீர்த்தது விழிகள்..!!
தள்ளி நின்ற பார்வைகள்..
தள்ளிச் செல்ல மனமின்றி
முட்டிக் கொண்ட
நேரங்களில்..
விட்டுச் சென்றன..
காற்றிடைவெளிகளை..!!
மின்னல் வெட்டின
தருணங்களில்
காந்தத்தின்
எதிர்துருவமாயின..
பார்வைகள்..!!
ஊமைக் கண்கள்
தளும்பி நின்றன...
தவிப்புடனே
மோனநிலையில்..!!
தலை தூக்காத
தலைப்புடன் நீ..!!
தலை திருப்பாத
தவத்தில் நான்..!!
_________________
-பூமகள்.
-பூமகள்.
0 comments:
Post a Comment